ADVERTISEMENT

திமுக மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகம் இயற்கை எய்தினார்...

08:30 PM Oct 24, 2018 | sakthivel.m



திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த நூர்ஜகான் பேகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அப்போலா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

ADVERTISEMENT


நூர்ஜகான் பேகம் ஆரம்பகாலத்திலிருந்தே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். பொதுக்கூட்டம், பிரச்சாரம் மூலம் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பேசி வந்ததின் மூலம் தலைமை கழக பேச்சாளராகவும், மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். அதோடு கலைஞர், பேராசிரியர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரின் மதிப்பிற்குரியவராவார். கடைசி வரை கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் முதல் ஆளாக போய் நிற்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டத்திலும் காரசாரமாக பேசுவார். அவரது இறப்பு செய்தி கேள்விப்பட்டு மாநில அளவில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், மகளிர் அணியினரும் திண்டுக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT