ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்படுகின்றனர்.
அதேபோல் தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொதுக்குழுவில் தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.
ADVERTISEMENT
Show comments