அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர் சாகர் (வயது 33) மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (21.02.2024) கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.