தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தென்சென்னை அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் வருவதற்கு காலதாமதமானது. கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட கட்சியினர் கொடிகளுடன் தரையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவர்களை மகிழ்விக்க எம்.ஜி.ஆர். மற்றும் விஜயகாந்த் போல வேடம் அணிந்த கலைஞர்கள் இரு கட்சித் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினர்.