கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியம், சி. தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நவீன கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
ADVERTISEMENT
குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா, ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கிருமிநாசினி தெளிப்பதை தொடங்கி வைத்தனர். இதில் ஊராட்சி மன்ற செயலாளர் வேல்முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments