ADVERTISEMENT

30 வயதுக்கு மேல் திருமணம் வேண்டாம் என்பது மோசமான கலாச்சாரம் – இயக்குநர் வாசு பளீச் பேச்சு!

01:05 PM Jul 17, 2019 | kalaimohan

திருச்சியில் ரோட்டரி கிளப் மாவட்டம் 3000 கவர்னர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ் வரவேற்றார். ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் புதிய கவனராக மருத்துவர் ஜமீர்பாஷா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் வாசு பேசுகையில்,

வாழ்க்கையில் கடனே இல்லாதவன் பணக்காரன், வியாதியே வராதவன் லட்சாதிபதி, கோவப்படாதவன் கோடிஸ்வரன். இந்த வகையில் ரோட்டரி கவர்னர் ஜமீர்பாஷா யாரிடமும் கோவப்படாத சிறந்த மனிதர். அவரது பணி சிறக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஒரு மோசமான கலாச்சாரம் ஊடுருவி வருகிறது. அதை தடுத்துநிறுத்த வேண்டும். 30 வயது கடந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள். சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு தங்களது சந்ததிகளை வளர்காதவர்கள் வயதான காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரராக இருந்தாலும் ஆதரவு இல்லாமல் கஷ்டப்பட்டாக வேண்டும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT