ADVERTISEMENT
ADVERTISEMENT
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் 7 மாதத்துக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
"ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு, இன்று (22/10/2020) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது". இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி என்ற அறிவிப்பால், பரிசல் ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ADVERTISEMENT
Show comments