Skip to main content

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டருக்கு 'பளார்'! 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி போட்டியிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31, 2019) மேச்சேரி அருகே சிந்த மணியூரில் அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார். பாமக மாநிலத்தலைவர் ஜி.கே.மணி மற்றும் மேட்டூர் அதிமுக எல்எல்ஏ செம்மலை, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

 

a


அன்புமணி பேச முற்பட்டபோது, திடீரென்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'அய்யா கடந்த முறை எம்பி ஆக வெற்றி பெற்றீர்கள். எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடினீங்களே அய்யா... இப்போது அதிமுகவோடு கூட்டணி வெச்சிட்டீங்களே... எட்டுவழிச்சாலைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கய்யா...,' என்று கூச்சல் போட்டார்.


இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்புமணி, எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். ஆனால், எம்எல்ஏ செம்மலை, கேள்வி கேட்ட நபரின் கன்னத்தில் 'பளார் பளார்' என இரண்டு முறை அறைந்தார். மூன்றாவது முறையாக லேசாக கன்னத்தில் தட்டி, 'யாருய்யா நீ... இங்கிருந்து கிளம்பிப் போய்யா,' என்றார். 


இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் மற்றும் கட்சியினர் அவரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று அந்தக் கூட்டத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அதன்பிறகே அன்புமணி பரப்புரையை தொடங்கினார். 

 

s


அந்த நபரை காவல்துறையினர் அழைத்துச்செல்லும்போது கூட, 'அய்யா கேள்விக்கு பதில் சொல்லுங்கய்யா' என்று கூச்சல் போட்டபடியே சென்றார். 


விசாரணையில் அந்த நபர், அக்கரையானூரைச் சேர்ந்த தங்கராஜ் என்கிற செந்தில் என்பதும், அதிமுக தொண்டர் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.