ADVERTISEMENT
ஷோசலிஸ் தொழிலாளர் அமைப்பு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்போர் நலக்கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் கட்டிட தரம் குறித்து ஐஐடி ஆய்வுக்குழுவின் அறிக்கையை தமிழக அரசு முழுமையாக வெளியிட வேண்டும். குடியிருப்புக்கு மக்கள் பங்களிப்புத் தொகையாக ரூ.1.5 லட்சம் கட்ட நிர்பந்திக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments