சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், "நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள்; ஆனால் நிலவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது ரஜினியை இயக்கியது. தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினிகாந்தின் சாயல் இருக்கும். எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள் ஆனால் ரஜினிக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்காது. மேடையில் நிற்பதை விட ரசிகர்களோடு சென்று அமர்ந்து விடலாமா என நினைக்கிறேன்" என்றார்.
Show comments