ADVERTISEMENT

மூத்த தலைவர் த.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

03:44 PM Feb 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். முதலில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார். பிறகு, சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.

மறைந்த தா.பாண்டியனின் உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.இந்நிலையில் தற்பொழுது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT