Skip to main content

அதிமுக அமைச்சர் சொந்த ஊரில் கம்யூனிஸ்ட் வெற்றி...'பரிதாபம் அமைச்சரே' என கிண்டலடிக்கும் மக்கள்...!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் அமோக வெற்றியை பெற்று வருகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வெற்றியை அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் செய்து வருகிறார்கள்.

 

local body election-Communist win-admk Shock

 



இந்த நிலையில் கெமிக்கல் கழிவை சோப்பு நுரை என கண்டுபிடித்த நவீன விஞ்ஞானியான அமைச்சர் கருப்பணனின் சொந்த ஊர் பவானி. இந்த பவானியை ஒட்டி உள்ள ஊராட்சி தான் காடையாம்பட்டி என்கிற ஆண்டி குளம் ஊராட்சி. இந்த ஊர் பவானியை மையமாகக் கொண்டுள்ளது. இங்குதான் அமைச்சர் கருப்பணன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் இந்த ஆண்டி குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கு அமைச்சர் கருப்பணன் மஞ்சுளா என்பவரை நிறுத்தியிருந்தார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த ஊராட்சி ஒதுக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திருமதி பத்மா விசுவநாதன் என்பவர் களமிறங்கினார். தேர்தலின்போது அமைச்சர் கருப்பணன் ஒரு கம்யூனிஸ்ட்காரன் நம்மை எதிர்த்து நிற்பதா என கடுமையாக பிரச்சாரம் செய்ததோடு ஓட்டுக்கு தாராளமாக வைட்டமின் "சி" கொடுத்து தனது வேட்பாளர் மஞ்சுளாவை வெற்றி பெற எவ்வளவோ  பாடுபட்டார்.

ஆனால் பொதுமக்களாகிய வாக்காளர்கள் இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் அமைச்சர் கருப்பணனுக்கு பலத்த அடியை கொடுத்து சுமார் 500 வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பத்மா விஸ்வநாதனை மிகப்பெரிய வெற்றி பெற வைத்தார்கள். இதனால் ஆண்டி குளம் ஊராட்சியில் உள்ள அதிமுகவினர் அமைச்சர் கருப்பணன்யை 'பரிதாபம் அமைச்சரே' என கிண்டலடித்து வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.