ADVERTISEMENT

8 ஆண்டுகளாக வெளிநாட்டில் கணவர்... மனைவி, மகள் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி

02:39 PM Dec 26, 2018 | kalidoss


ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பிரம்பராயர் கோயில் தெருவில் ரேகா(30), அவரது மகள் நிஷாந்தி(6) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று வயல்வெளியில் இருவரும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். இருவரும் 90% தீக்காயம் பட்டு அபாயநிலையில் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைகாக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் கணவர் செல்வம் இவர்களை பிரிந்து 8 வருடமாக வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் குடும்பத் தகராறால் இதுபோன்று நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT