கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ளது அரிமா மளிகை. நேற்று இரவு இந்த கடையின் ஓட்டை உடைத்து உள்ளே சென்று திருடும்போது பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தான் திருடன். பணம் கிடைக்காத கோபத்தில் கடையிலிருந்த பொருட்களை உடைத்து சேதபடுத்திய திருடன் கடையின் உரிமையாளரை திட்டி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இன்று காலை கடையை திறந்ததும் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Show comments