Skip to main content

குடித்துவிட்டு ஆய்வுக்குச் சென்றதாக குற்றச்சாட்டு; ஒன்றியக் குழு உறுப்பினர் கூட்டத்தில் பரபரப்பு !

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவர் செல்லத்துரை தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே பா.ம.க ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் பேசும்போது, எருமனூர் ஊராட்சியில் நடந்துவரும்  ஊரக வேலை வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், எம்.என்.ஆர் பதிவேட்டைக் கிழித்தெறிந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆய்வுக்கு வரும்போது துணை பி.டி.ஓ. ராஜேஷ் மதுபோதையில் வருகிறார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் என்று கூறினார். 

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

அதற்கு யாரும் பதில் அளிக்காததால் கவுன்சிலர் சரவணன், 'துணை பி.டி.ஓ ராஜேஷ் எழுந்து பதில் கூறுங்கள்' என ஆவேசமாகக் கேட்டார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜேஷ், 'நான் மது குடித்ததை நீங்கள் பார்த்தீர்களா..?' எனக் கேட்டார். "ஆமாம் நான் தெரிந்து தான் கூறினேன். படமெடுத்துக் காட்டவா...?" என சரவணன் கேட்டார். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, "இதுபோன்று துணை பி.டி.ஓ செயல்பட மாட்டார். நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் முகாம் நடந்ததால் அவருக்குப் பணி அங்கு ஒதுக்கப்பட்டு இருந்தது" என்றார்.

 

இதையடுத்து தன்னை பற்றி பேசிய கவுன்சிலரைக் கண்டித்து துணை பி.டி.ஓ ராஜேஷ் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறி அலுவலகத்தின் முன்பு திரண்டனர். அதனைத் தொடர்ந்து சில ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அதிகாரிகளும் எவ்வித பதிலும் சொல்லாமல் அலட்சியமாக வெளிநடப்பு செய்ததைக் கண்டித்துக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறி போராட்டத்திற்குத் தயாராகினர்.

 

Excitement over member's accusation that the officer was drunk and going for inspection!

 

அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளும், ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தனித்தனி குழுவாக இருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர் ஆகியோர், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே சமரசம் செய்ததையடுத்து அமைதி ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு ஒன்றியக்குழுக் கூட்டம் மீண்டும் தொடங்கி அமைதியாக நடைபெற்றது.

 

கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், முழு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.