ADVERTISEMENT

  சிபிஎம்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

11:59 AM Mar 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக -மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், ‘’மார்க்சிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கிறது. 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் திமுகவுக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கும்’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT