Skip to main content

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத பாஜக அரசை தோற்கடிப்போம்... மகளிர் தினத்தை முன்னிட்டு தோழர் பாலபாரதி சூளுரை!!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019


திண்டுக்கல் முன்னாள சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்( சிபிஎம்) மாநில குழு உறுப்பினருமான  செல்வி  தோழர்  க.பாலபாரதியிடம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொடுத்த பேட்டியில்...

 

 

மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தினம் என்பதால் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில்தான் பெண்களுக்கு வாக்குரிமை, எட்டு மணிநேரவேலை இவைகள் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கு பெண்கள் ஒருங்கிணைந்த நாளாகும், முதன்முதலில் சோவியத்ரஸ்யாவில் இந்த மார்ச் எட்டில்  உழைக்கும்பெண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு நாளடைவில் உலகின் பலநாடுகளின் கவனத்தை இத்தினம் ஈர்த்தது. 

 

thozhar balabharathi women's day interview

 

சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை இவைகளை இயற்கையாகப் பெற்ற பெண்களின் உழைப்பை முதலாளித்துவ சமூக அமைப்புகள் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டதோடு பெண் கல்வி அவர்களுக்கான வேலை உரிமைகளை சலுகைகளாக வழங்கியது.

 


இந்தியாவின் சுதந்திரப்போரில் பஙகெடுத்து சிறை சென்றவர்கள்,  உயிர்தியாகம் செய்தவர்கள் பெண்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில்கூட சட்டம் இயற்றும் இடத்தில் அவர்கள் இல்லை. அரசியல்கட்சிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் நீடித்துவரும் ஆணாதிக்கமே அதற்கு காரணமாக அமைந்துள்ளது.


 

33%இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்படாமல் 20ஆண்டுகளாக கிடப்பில்போடப்பட்டிருக்கிறது. இது மிகவும் வெட்ககரமானது. அவனிசதுர்வேதி இந்தியாவில் போர்விமானத்தை இயக்கிய முதல்பெண் என்ற பெருமையோடு பெண்ணால் முடியாதது ஏதுமில்லை என சாதித்திருக்கிறார். இருந்தும் சட்டமியற்றும் நிமிடங்களில் பெண்களைக் காணமுடியவில்லை என்பது துரதிருஷ்டம். இந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத பாஜகவை தோற்கடிக்கப்படுவதோடு இந்தியாவில் பெண்கள் வாழத்த தகுதியற்ற நாடாக இருந்து வருவதாக பல சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறேன். குழந்தைகள் மீதான பாலியல்வன்முறை அதிகரித்துவருகின்றன. இவைகளின் பின்னால் ஆளும் அரசின் பெண் விரோதப்போக்குகளும் உள்ளன.

 


பெண்ணை போகப்பொருளாக கருதும் நுகர்வுகலாச்சார சிந்தனையை தகர்த்தெறிந்து குடும்பம், அலுவலகம், அரசியல் என அனைத்திலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக மதிக்கப்படுவதற்கும், அத்தகையநிலை சமூகத்தில் வளர்வதற்கும் இந்த மார்ச் எட்டாம் தேதி ஊத்வேகமூட்டுகிற நாளாக, ஆண்டாக அமைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.