ADVERTISEMENT

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தம்பதியினர்

10:44 AM Apr 19, 2019 | manikandan

கன்னியாகுமரி மக்களவை தோ்தல் வாக்கு பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே சில பூத்துகளில் கூட்டமும் சில பூத்துகள் வெறிச்சோடியும் கிடந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் கமிஷனின் 100 சதவித வாக்குப்பதிவு இலக்கு அடையமுடியுமா என இருந்த சூழ்நிலையில் வாக்குப்பதிவும் மந்தமான நிலையே கன்னியாகுமரி தொகுதியில் இருந்தது.


இந்த நிலையில் நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் வாக்கு பதிவு மந்தத்துக்கு அதுவும் ஓரு காரணமாக இருந்தது. ஆனால், திருமணம் நடக்கும் அதே நாளில் தங்களுடைய ஜனநாயக கடமையையும் ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னியாகுமரி தொகுதியில் பொட்டல் பகுதியை சோ்ந்த நிர்மல் - அபிதா, தட்டன்விளையை சோ்ந்த ஜெகன்-சுபா தம்பதியினர் திருமணம் கோலத்தில் வந்து, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT