Skip to main content

ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

எப்படியாவது வெற்றிபெறுவது என்ற இறுதிக்கட்ட வியூகத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. தினமும் இரவு 11 மணிக்கு மேல் உளவுத்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட அமைச்சர்களிடமும் தொகுதி நிலவரங்களைப் பற்றி விவாதித்தபடி இருக்கிறார். அதில் எடுக்கும் முடிவுகளின்படி பல விசயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்கிறார்கள் அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள். 

 

ops eps



இதுகுறித்து எடப்பாடியின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, "நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கும்,  இடைத் தேர்தலில் 9 தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கும் சாதகமாக இருப்பதாக கடைசிக்கட்ட தகவலை எடப்பாடிக்கு தந்துள்ளனர் உளவுத்துறையினர். நாடாளுமன்றத்தை விட இடைத்தேர்தலில்தான் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்களின் கவனம் அதிகமாக இருப்பதால் குறைந்தபட்சம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளனர். 

 

admk alliance



இடைத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம்தான் வெற்றியை தீர்மானிப்பதாக இருப்பதை மத்திய-மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட  ரிப்போர்ட் கூறுகிறது. அதன்படி, அனைத்து வியூகங்களையும் அதிகாரிகள் மூலமாகவே செயல்படுத்தியுள்ள எடப்பாடியும் அமைச்சர்களும், இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க.வினரிடமும் கூட்டணிக் கட்சிகளிடத்திலும் தாராளமயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். மேலும்,  சொந்த கட்சியில் உள்குத்து, கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தி இரண்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி. 

 

modi



இடைத்தேர்தல் தொகுதிகள் குறித்து சமீபத்தில் அமைச்சர்களிடம் ஆலோசித்த எடப்பாடி, அம்மா இறந்ததையடுத்து "அ.தி.மு.க. ஆட்சி 6 மாதத்திலே கவிழ்ந்துவிடும் என கணக்குப் போட்டனர். கவிழ்ப்பிற்கான பல முயற்சிகளை     ஸ்டாலினும் தினகரனும் எடுத்தனர். தவிர, டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியும் உங்களுக்குத் தெரியும். ஸ்டாலின் - தினகரன் முயற்சிகளை உடைத்தும், டெல்லி நெருக்கடியை சமாளித்தும் இதுவரை ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். இனி உங்கள் கைகளில் தான் இருக்கிறது. 22 தொகுதிகளுக்கு இடைத்தேர் தல்ங்கிறது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் சோதனை. இதில் சறுக்கினால் ஆட்சி கவிழ்வது உறுதி. 

நம்முடைய ஆட்சி கவிழ்ந்து தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழல் உருவானால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலை என்னவாகும் என யோசியுங்கள். மீதியுள்ள 2 வருஷமும் நம் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இந்த காலகட்டத்தில் அ.தி.மு.க.வை பலவீனப் படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்துவார்கள்.  

ஒருவேளை, தி.மு.க. தலைமையில் ஆட்சி உருவாகாமல் நம்முடைய ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால், மீண்டும் ஆட்சியை நாம் பிடிப்போமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், இதுவரை ஆட்சியை பாதுகாத்துவிட்டேன். இனி மீதியுள்ள 2 வருட ஆட்சி தொடர, எம்.எல்.ஏ.க்கள்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, இடைத்தேர்தலில் நமக்கு கணிசமான வெற்றிபோதும் என்றாலும் 22 தொகுதிகளையும் ஜெயித்தால்தான் தி.மு.க.வின் எதிர்கால அரசியலை முடக்க முடியும். 

அதனால், மீதியுள்ள 2 வருடமும் எல்லா வளத்துடனும் எம்.எல்.ஏ.க்கள் இருக்க, இந்த ஆட்சியை அவர்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதனால், இடைத்தேர்தலில் அலட்சியம் காட்டாமல் 22 தொகுதிகளையும் ஜெயிப்பதற்கு முழு முயற்சியையும் உழைப்பையும் காட்டச்சொல்லுங்கள். இனி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அவர்கள் வழியாக அனைத்து நிர்வாகிகளும் உண்மையாக உழைத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்ங்கிறதை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என பல்வேறு விவரங்களை அமைச்சர்களிடம் சொல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி. மேலும், எம்.எல்.ஏ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு எடப்பாடியே இதனை வலியுறுத்தவும் செய்திருக்கிறார்'' என விவரித்தனர். 

எடப்பாடியின் கட்டளைப்படி இடைத் தேர்தல் தொகுதிகளில் கடைசிக்கட்ட பண விநியோகமாக, ஆளுங்கட்சி ஆதரவு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000-மும், எதிர்க் கட்சிகளின் வாக்குகளை கவர்வதற்கு 3000-மும் கொடுக்கத் திட்டமிட்டு 25 சதவீத மக்களை இதுவரை வளைத்துள்ளனர். பண விநியோகத்தில் 60 சதவீதம் முடித்தாலே நிம்மதியாக இருக்கலாம் என ஆளும் கட்சி தரப்பில் தற்போது எதிரொலிக்கிறது. 

இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மோடி, கூட்டம் முடிந்ததும் எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் தேர்தல் பணிகளையும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் குறித்து 20 நிமிடம் விவாதித்திருக்கிறார். இது குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "தேர்தல் பற்றி விசாரித்த மோடியிடம், "எம்.பி. தொகுதிகளில் 22 முதல் 28 தொகுதிகள் நமது கூட்டணிக்கு கிடைக்கும். பா.ஜ.க.வின் 5 தொகுதிகளின் வெற்றிக்கு நாங்கள் பொறுப்பு' என இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சில சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட மோடி, "எனக்கு கிடைக்கிற தகவல்கள் நெகட்டிவ்வாக இருக்கிறது. அதனை பொய்யாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என அட்வைஸ் செய்து விட்டு கிளம்பினார்'' என்றனர் பா.ஜ.க. மேலிட தொடர்பாளர்கள். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

வாக்கு சதவீதம் சரிவு; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Radhakrishnan explained decline in voter turnout

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை  நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.