Skip to main content

கரோனா பதிப்பு ஆய்வு - சி.ஏ.ஏ. கணக்கெடுப்பு என அதிகாரிகள் சுற்றிவளைப்பு...!!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

டில்லியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை சேர்ந்த 8 பேர்களை தனிமைப்படுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவர்கள். அதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 1ந்தேதி வாணியம்பாடி நகரின் அனைத்து பகுதிகளில் வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இரும்பல் இருப்பவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

 

 Corona Survey - Officers Surrounded as CAA Survey


இப்பணிகளில் சுகாதாரத்துறை தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 150க்கும் மேற்பட்டோர் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதிமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கணக்கு எடுக்க வந்துள்ளதாக தவறான தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி இஸ்லாமிய மக்கள் கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை சுற்றி வளைத்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை கணக்கெடுக்க வந்தவர்கள் நகர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டு, பிரச்சனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை பிடித்து ஜீப்பில் ஏற்றினர். இதனைப்பார்த்து தகராறு செய்த வேறு சிலர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிவரும் அதேவேளையில் அழைத்து சென்றவர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சனையால் அந்த பகுதியில் கணக்கெடுப்பு பணி 1 மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டது. காவல்துறை வந்தபின் தற்போது தொடர்ச்சியாக அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.