ADVERTISEMENT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காதல் தம்பதியினர் நந்திஷ்- சுவாதி ஆணவப்படுகொலையை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகம் முன் கன்டண ஆர்ப்பாட்டம் இன்று 21ந் தேதி நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ . இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மாநில குழு உறுப்பினர் இலகு மய்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
Show comments