இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேறி, கே.கே. நகரில் குடியேறினார் நல்லக்கண்ணு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய திட்டம் வருவதால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும்நோட்டீஸ் தரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் வெளியேறியதுபோல் நல்லக்கண்ணுவும் வெளியேறினார்.
அந்த குடியிருப்பு வீடு அரசு, அவருக்கு இலவசமாக வழங்கியது. எதையும் இலவசமாக பெற்றுக்கொள்ள விரும்பாத நல்லக்கண்ணு, இது என் கொள்கைக்கு விரோதமானது எனக்கூறி அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்து தங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.