ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

12:52 PM Sep 27, 2019 | santhoshb@nakk…

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த வழக்கில் இருந்து விரைவில் விடுதலையாக கோரி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 2- வது முறையாக மொட்டை போட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலாதேவி. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று பேரும் கண்டிப்பாக வழக்கறிஞருடன் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT