குளிர்ச்சியாக இருக்கும் என கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் இரசாயணம் கலந்த கூல்டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களை வாங்கி அருந்துவதால் மேலும் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அதேசமயம் இயற்கையான குளிர்பானங்களை, உணவு பொருட்களை உண்பதால் உடல் சமநிலை அடைவதுடன் நோய் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும். அதனால் இயற்கையான உணவு பொருட்களை விற்பனை செய்யும் சாலையோர கடைகள் எல்லா ஊர்களிலும் பெருகிவிட்டன.
இளநீர், பனை நொங்கு, தர்பூசனி, வெள்ளரிக்காய், வெள்ளரி பழம் போன்ற இயற்கையான உணவு பொருட்களை விவசாயிகளிடம் நேரிடையாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி வரும் சிறுவியாபாரிகள் அவைகளை நகர்ப்புரங்களின் சாலையோரங்களிலும், வீதி வீதியாகவும் விற்பனை செய்கின்றனர். உடலுக்கு நல்லது என பொதுமக்களும் அவைகளை விரும்பி வாங்குவதால் விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனால் சூட்டை தணிக்க மக்கள் சாலை ஓரங்களில் முகாமிட்டிருக்கும் இளநீர்,நுங்கு,வெள்ளரிம் மற்றும் பழச்சாறு கடைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இயற்கையான உணவு பொருட்களை உண்பதால் உடல் நோய்கள் அகல்வதுடன், உள்ளூர் விவசாயிகளுக்கும், சிரு வியாபாரிகளுக்கும் வருவாயும் கிடைக்கிறது.