Skip to main content

ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

 

 Alert rains for seven districts

 

ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். சென்னையை பொருத்தவரை ஓரிரு முறை லேசான மழை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

இந்நிலையில் வேதாரண்யத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது  அதேபோல் நெல்லையில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்