ADVERTISEMENT
ADVERTISEMENT
கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண்களில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக, தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.வினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்த சூழலில் கொடிசியா பகுதியில் உள்ள தூண்களில் பா.ஜ.க. போஸ்டர் ஒட்டச் சென்றுள்ளனர். அப்போது, தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
ADVERTISEMENT
Show comments