ADVERTISEMENT

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

06:51 PM Jun 22, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை வானிலை ஆய்வு மையம் 22.06.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை போரூர் அருகே குன்றத்தூரில் திங்கள்கிழமை மாலை லேசான மழை பெய்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT