ADVERTISEMENT

சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தினப் பேரணி

10:45 AM May 02, 2019 | bagathsingh

உழைக்கும் மக்களின் உரிமை தினமான மே தினத்தை முன்னிட்டு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன் கிழமையன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி சத்தியமூர்த்தி சாலை, மேலராஜவீதி, அண்ணாசிலை வழியாக சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சங்கமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ராஜா, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், பெரி.குமாரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT