Skip to main content

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள்! (படங்கள்)

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் நினைவுநாளான இன்று (09.08.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதைக் கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பேரணி (படங்கள்)

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் பேரணி நடத்தினர். சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத்தின் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் 2021ஆம் ஆண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.