ADVERTISEMENT

சென்னையில் கழிவுநீர் குழாயில் பச்சிளம் குழந்தை- சுதந்திரம் என பெயர்வைப்பு!!

04:54 PM Aug 15, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு மருத்தவ சிகிச்சை அளிக்கப்படட்டு ''சுதந்திரம்'' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.பிஸ்.எஸ் நகரில் 6 தெருவில் சாக்கடை கழிவுநீர் குழாயில் பிறந்த குழந்தை தொப்புள்கொடிகூட அறுக்கப்படாத நிலையில் தூக்கியேற்றியபட்டுள்ளது. எதேச்சையாக அந்த கழிவுநீர் குழாயில் குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதை கண்ட பெண் ஒருவர் அந்த குழந்தையை மீட்டார். குழந்தை இறந்துவிட்டதாக சுற்றியிருப்போர் நினைத்திருக்க அந்த குழந்தை உயிருடன் இருந்தது சுற்றி இருப்பவர்களை பிரமிக்க செய்தது. சாக்கடை குழாயில் சிக்கிக்கொண்டு இவ்வளவு நேரம் உயிரை தாக்குபிடித்திருந்ததை கண்டு அனைவரும் பிரமித்தனர்.

அதன் பிறகு அந்த குழந்தையை மீட்ட அந்த பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் அந்த குழந்தையை நீரால் சுத்தம் செய்து சுதந்திர தினத்தில் கண்டெடுத்ததால் அந்த குழந்தைக்கு ''சுதந்திரம்'' என பெயர் சூட்டினர். பிறகு அந்த குழந்தை எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிற நிலையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT