Skip to main content

சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த 4 வயது சிறுமி அடித்துக்கொலை; வடமாநில கொடூரன் கைது!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சிறுமி ஒருவரை டாஸ்மாக்கிற்கு அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவன்  சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக அந்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தம்பாக்கம் பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக 25 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

 4-year-old girl beaten for chicken pakoda; Northern Territory youth arrested

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய உறவினரான நிலக்கர் என்ற இளைஞருடன் சென்ற அமீரின் மகள் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த நிலக்கர் அந்த சிறுமி என்ன ஆனார் என்பது குறித்து தெளிவாக சொல்லவில்லை. இதனால் பல இடங்களில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர் பெற்றோர்கள். இப்படி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இப்படியிருக்க திங்கட்கிழமை காலையில் ஹாலோபிளாக் கற்கள் தயார் செய்யும் அந்த தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஒரு முட்புதரில் காணாமல் போன அந்தச் சிறுமி முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

 

 4-year-old girl beaten for chicken pakoda; Northern Territory youth arrestedpolice

இதைப் பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக வெள்ளவேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக சிறுமியின் உடலை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது முதலில் சிறுமி தவறி விழுந்ததாக நிலக்கர் சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்கலாம் என நினைத்த நேரத்தில் இது ஒரு கொலை என்பது சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்தது.

policepolice

 

police

அதனையடுத்து நிலக்கரை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதேபோல் அவனது கூட்டாளிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை நிலக்கர் டாஸ்மார்க் மதுக் கடைக்கு அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நிலக்கரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் மரணத்திற்கான திடுக்கிடும் காரணம் தெரிய வந்தது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு சிறுமியுடன் சென்ற நிலக்கர் திரும்பி வரும்போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்ததாகவும், பெரிய பாலம் ஒன்று மேல் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும், அப்போது சிக்கன் பக்கோடா தனக்கு வேண்டும் என கேட்டு அந்த சிறுமி அடம்பிடித்ததில் அந்த சிறுமி நிலக்கரின் கையை கடித்ததால் ஆத்திரமடைந்த நிலக்கர்  சிறுமியை அடித்துக் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி கீழே விழுந்து உயிர் இழந்ததாக நாடகமாடியதையும் ஒப்புகொண்டான். இதனையடுத்து வடமாநில கொடூரன் நிலக்கரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.