திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் இரண்டு டூ வீலர்கள் மோதி விபத்தானது. அப்போது, அந்த வழியாகச் சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விபத்தில் சிக்கிய இருவரையும் தன் காரில் ஏற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்தார். மேலும், அவ்விபத்து பாதிப்பால் மயங்கிய குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி கிடைக்கச் செய்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
விபத்து போன்ற இடர்பாடான சமயங்களில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது ஆறுதலானது.
.
Show comments