Skip to main content

‘ரஜினிக்கு ஈக்வல்னா அது அஜித் ஒருத்தர்தான்!” -‘மல’ ‘தல’ என புகழ்ந்துதள்ளிய கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

இன்று விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

“முதலமைச்சர் விருதுநகர் மாவட்டத்துக்கு வர்றாரு. சாத்தூர்,  விருதுநகர், அருப்புக்கோட்டைன்னு  3 நகராட்சிக்கும் சேர்ந்து 444 கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுறாரு. மெடிக்கல் காலேஜுக்கு அடிக்கல் நாட்டுறாரு. 20,000-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்குறாரு. கட்டப்பட்டிருக்கிற நகராட்சி பில்டிங், யூனியன் பில்டிங் எல்லாம் திறந்து வைக்கிறாரு. ஆக,  ஸ்பாட்லயே அந்தந்த மாவட்டத்தோட மக்கள் குறைகளைக் கேட்டு,  மனு வாங்கி, பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய முதலமைச்சராக எடப்பாடியார் இருக்கிறார். இது பொறுக்கமுடியாத ஸ்டாலின்,  அவங்க ஆட்சில பாலும் தேனும் ஓடுன மாதிரி பேசிக்கிட்டிருக்காரு.  அவங்க ஆட்சில கரண்ட்டே கிடையாதே! 16 மணி நேரம் மின் வெட்டு இருந்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி.

 

admk minister rajendra balaji pressmeet

 

2006-ல வந்த தி.மு.க.வை 2 வருஷத்துக்கு அப்புறம் கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாம, திமுக  மந்திரிகள விரட்டி விரட்டி மக்கள் அடிச்சாங்க. ஜெ.ஆட்சியில, இன்னைக்கு எடப்பாடியார் ஆட்சியில எந்த விதமான பிரச்சனைகளோ எதிர்ப்போ கிடையாது.  மக்கள் சுபிட்சமா இருக்காங்க. பிரச்சினை இல்லாத ஒரு நல்லாட்சி நடத்திக்கிட்டிருக்கிற முதலமைச்சரா எடப்பாடியார் இருக்கிறார்.  இது பொதுமக்களை பாதிக்காத பட்ஜெட்.  இது முத்தான பட்ஜெட்னு  நல்லவர்கள் வாழ்த்துறாங்க.  ஸ்டாலின் யாரு? எதிர்கட்சி தலைவர். எதிர்கட்சி தலைவர்ன்னா வசைபாடாம வாழ்த்தவா செய்வாரு.

வருமான வரித்துறை எங்க கட்சிகாரங்களக்கூட ரெய்ட் பண்ணுச்சி.  உடனே, அதுக்கு ஒரு குற்றாச்சாட்டா? அதெல்லாம் கிடையாது. அவங்களுக்கு கிடைக்கிற தகவல் அடிப்படைல போய் சோதனை போடுறாங்க.  சோதனைல எதுவும் கிடைச்சதுன்னா நடவடிக்கை எடுப்பாங்க. இல்லைன்னா, எதுவும் எடுக்கப் போறதில்ல. அதுனால வருமான வரித்துறை.. அதுவந்து ஒரு தனி அமைப்பு மாதிரி செயல்பட்டுட்டு இருக்கு.  அதுல அரசியல் தலையீடு எதுவும் கிடையாது. ரஜினிக்கு ஈக்வலா எல்லாம் நடிகர்கள்ல இப்ப யாரும் கிடையாது. ரஜினிக்கு ஈக்வல்னா அஜித் ஒரு ஆள்தான் இருக்காரு.  இவங்க ரெண்டு பேருதான்.  அது மல. இது தல.  அவ்வளவுதான்.” என்றார், வழக்கம்போல் அதிரடியாக.

ரஜினி, அஜித் அளவுக்கு விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையே சூசகமாகச் சொல்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.