ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

08:10 PM Sep 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பள்ளிக்கூடங்களிலுள்ள ஆரம்ப வகுப்புகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவது தொடர்பான மிகவும் முக்கியமான விடயத்தை கவனத்திற்கு கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது மாநிலத்தின் பொறுப்புள்ள அலுவலர்களாக நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'எண்ணும் எழுத்தும்' திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. இது, குழந்தைகள் தங்களின் கற்றல் செயல்பாட்டில் ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாக செயலூக்கம் மிக்க இடங்களாக வகுப்பறைகளை மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மரபான வழக்கமாக இது இருக்காது. அனுபவரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது. இது அச்சுறுத்தலற்ற மதிப்பீட்டு முறையை ஜனநாயகரீதியான, எல்லோரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கிறது. அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது கற்றல் நிலை, கற்றல் விளைவுகள், கற்றல் செயல்பாடுகள், மகிழ்ச்சி மற்றும் மன அழுத்த நிலைகள் கற்றல் சிறப்புப் பகுதிகள் அச்சுறுத்தலற்ற அணுகுமுறை, உட்கட்டமைப்பும் வசதிகளும் மற்றும் பள்ளி சுகாதாரத் திட்டம் போன்ற அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதில் கூட்டு முயற்சியானது மாணவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்குவதிலும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்குவதிலும் இன்றியமையாததாகும். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதன் மூலம் நம் மாணவர்களின் நலனை மேம்படுத்த முடியும்; இந்த முன்முயற்சியை மேலும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். இதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. மேலும், நீங்கள் இந்த ஆய்வுகளை விடாமுயற்சியுடனும் நம் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஆய்வுகளுக்காக நீங்கள் பள்ளிப் பார்வை செயலியைப் பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும் முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வுசெய்வதையும், வகுப்பறைகளைக் கண்காணிப்பதையும் பள்ளிப் பார்வை செயலி மூலம் நீங்கள் உறுதிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT