ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/12/2021) தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவின் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், சென்னையில் மழைநீர் தேங்காமல் எப்படி தடுக்கலாம் என்பது குறித்தும், அதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Show comments