ADVERTISEMENT
பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23/12/2021) தொடங்கிவைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கிவைத்துள்ளார்.
ADVERTISEMENT
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்கனவே 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments