ADVERTISEMENT

ரெட் அலர்ட்; சென்னை சென்ட்ரலில் போக்குவரத்து நெரிசல்

10:09 AM Nov 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சனி, ஞாயிறு விடுமுறை. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் படையெடுத்து வருவதால் சென்ட்ரலுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT