ADVERTISEMENT

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; அமைச்சர் அறிவிப்பு

06:01 PM May 19, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே அறிவித்ததை விட ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2/08/2023ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த அந்த கவுன்சிலிங் 2/07/2023ல் இருந்து துவங்கப்படுகிறது. அதில் சிறப்பு இட ஒதுக்கீடு 2 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரையிலும் பொது கலந்தாய்வு 7/7/2023 ஆம் தேதியில் இருந்து 24/08/2023 வரையிலும் நடைபெறும். துணைக் கலந்தாய்வு 26/8/2023ல் இருந்து 29/08/23 வரை நடைபெறும்.

எஸ்.சி.ஏ, எஸ்.சி. கவுன்சிலிங் 1/09/2023ல் இருந்து 2/9/2023 ஆம் தேதி வரை நடைபெறும். இவை அனைத்தும் முடிந்த பின் முதலாமாண்டு பொறியியல் படிப்பு 3/09/2023 அன்று துவங்கப்படும்” என்றார். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மேலும் 3 தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் ஆண்டுக்கு ரூ.200 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்க இருக்கிறது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT