ADVERTISEMENT
வெப்பசலனத்தால் தமிழகத்தில் கடலூர் உள்பட 5 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
ADVERTISEMENT
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, இமயமலை அடிவாரப்பகுதியில் பருவமழை தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை கிடைத்து இருக்கிறது. இந்த சூழல் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT