ADVERTISEMENT

அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

04:45 PM Jun 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT