ADVERTISEMENT

நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

12:54 PM Jun 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT