ADVERTISEMENT

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு- சென்னை மண்டலம் இரண்டாம் இடம்!

03:03 PM Jul 15, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக, மண்டலம் வாரியான மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

அதன்படி, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்தது; 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு மூன்றாமிடம் பிடித்தது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வில் 91.46% பேர் தேர்ச்சி; இது கடந்த ஆண்டை விட 0.36% அதிகம். மாணவிகள் 93.31%, மாணவர்கள் 90.14% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 18,73,015 பேரில் 17,13,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT