ADVERTISEMENT

சி.பி.ஐ- க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அடுக்கடுக்கான கேள்வி!

03:12 PM Dec 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட நிதி மோசடி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி சஞ்சீவிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ- க்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், கடந்த 20 ஆண்டுகளில் சி.பி.ஐ- க்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன? சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ள வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விரிவான அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT