tamil medium studies government exam quota madurai high court bench

Advertisment

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (04/11/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்- 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாதுதமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன' எனக் கூறிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisment