வேலூர், பள்ளிகுப்பதிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ADVERTISEMENT
அப்போது அங்கு, மூட்டைகளிலும், அட்டைப்பெட்டிகளிலும் கட்டு, கட்டாக பணம் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையிலும், பெட்டியிலும் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் எழுதிவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.15 கோடி அளவில் பணம் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டது யாருடைய பணம் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
ADVERTISEMENT
Show comments