ADVERTISEMENT
அதே சமயம் அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் சுந்தரத்திடம் உங்கள் காரில் இருந்து புகை வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தரம் உடனடியாக தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். மேலும் காரில் இருந்த 4 பேரும் காரை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து காரில் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது.
ADVERTISEMENT
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அண்ணாசாலையில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் இந்த தீவிபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Show comments