Skip to main content

விமானத்தில் வந்து காரை திருடிய வடமாநில வாலிபர்கள்

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

car incident in chennai haryana youngsters came in chennai flight 

 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மோகன் அயானி என்பவர் தனக்குச் சொந்தமான கார் ஒன்றை, ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில்  வசித்து வரும் தனது மருமகனுக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்க இணையதளம் மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள  நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்து உள்ளார். அதற்கு நிறுவனம் சார்பில் உங்கள் காரை செகந்திராபாத்தில் கொண்டு சேர்க்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மோகன் அயானியும் ஒப்புக் கொண்டு உள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சார்பில் ஹரியானாவில் இருந்து சென்னை வந்த இரு வடமாநில இளைஞர்கள் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி மோகன் அயானியிடம்  இருந்து காரை பெற்றுக் கொண்டு செகந்திராபாத் செல்வதாக கூறி காரை ஓட்டி சென்று உள்ளனர். ஆனால் நிறுவனம் சார்பில் ஏற்கனவே தொலைபேசியில் தெரிவித்தபடி உரிய நேரத்தில் காரை தனது மருமகனிடம் ஒப்படைக்காததால் சந்தேகம் அடைந்த மோகன் அயானி மீண்டும் நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது கூடுதலாக 25 ஆயிரம் பணம் தந்தால் தான் காரை ஒப்படைப்போம் என்று கூறியுள்ளனர்.

 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன் அயானி  இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை செகந்திராபாத்துக்கு  ஒட்டி செல்லாமல் பணம் பறிக்கும் நோக்கில் பெங்களூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு விரைந்த போலீசார் காரை கடத்தி சென்ற ஹரியானவை சேர்ந்த  பிராவின் சிங், ரோனாக்  ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் விமானம் மூலம் சென்னை வந்து காரை பெங்களூருக்கு கடத்தி சென்றதும். இதற்கு முன்னர் இவர்கள் ஏழு பேரிடம் இதே போல் கார் டிரைவராக நடித்து கார்களை கடத்தி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் வந்து காரை கடத்தி சென்ற சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

விடுதி - திருமண மண்டபங்களில் போலீசார் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Hostel - Police intensive search in marriage halls

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மட்டும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் தங்கி இருந்தவர்கள் விபரங்களைச் சேகரித்தனர்.

இதேபோல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.