குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.
ADVERTISEMENT
அதன் தொடர்ச்சியாக இன்று (02/02/2020) காலை, சென்னை- துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு- பெருமாள் முதலி தெருவில் வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராகக் கையெழுத்து வாங்கி, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
ADVERTISEMENT
Show comments