ADVERTISEMENT

விருதுநகரில் இஸ்லாமிய சமுதாயத்தினர் சாலை மறியல்!

03:24 PM Feb 15, 2020 | Anonymous (not verified)

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறையைக் கண்டித்து இஸ்லாமிய சமுதாயத்தினர் போராடி வருகின்றனர். இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தேசியக் கொடியைக் கையிலேந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அங்கு உடனே விரைந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாளும் துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தும் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கலைந்து சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT