அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த நவீத் டிபி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை கடத்திய அந்த கும்பல் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணமில்லை என்றவுடன் தனது ஐபோன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் கூறியிருந்தார்.
அந்த இரண்டு பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல் போலிசாருகே அதிர்ச்சியை தரும் வகையில் இருந்தது. அதாவது நவீத்தின் காதலியும், டென்னிஸ் வீராங்கனையுமான வாசவிதான் நவீத்தை கடத்த சொன்னார் என அந்த இரு இளைஞர்களும் கூற அதிர்ந்த போலீசார் டென்னீஸ் வீராங்கனை வாசவியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
இதுதொடர்பாக வாசவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கு முற்றிலும் திசை திரும்பியது, அதாவது சமீப காலமாக நவீத்க்கும் எனக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தது இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட இருப்பதாக நவீத் மிரட்டல் விட்டார் என கூறியுள்ளார். காதல் விவகாரம் என்பதால் கண்டித்து அனுப்பிவிட வெளிநாடு தப்பி செல்லமுயன்ற வசாவியை போலீசார் கைது செய்தனர்.